பேரணாம்பட்டு, ஏப். 7: பேரணாம்பட்டு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிக்குத்தி அருந்ததி காலனி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் புவனேஷ்(4). அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினர்களான சரஸ்வதி- சங்கர் தம்பதியின் மகன் மதிலேஷ் என்ற தீக்ஷித்(3). இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை புவனேஷ் மற்றும் தீக்ஷித் அருகே உள்ள அவர்களது உறவினர் சுரேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்று விளையாடினர். அப்போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவர்கள் 2 பேரும் தவறி விழுந்ததாக தெரிகிறது. இந்நிலையில் புவனேஷ் மற்றும் தீக்ஷித்தை காணாத பெற்றோர் தேடிய போது தண்ணீர் தொட்டியில் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது.