நாமக்கல், ஏப்.5: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் முழுவதும் மின் தடை ஏற்படாது என்றும், பொதுவிடுமுறை என்றாலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் வாரிய ஊழியர்களுக்கும் விடுமுறை கிடையாது என்றும் நாமக்கல் மின்சார வாரியத்தின் மேற்பார்வையாளர் சந்தானம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட மின்சார வாரியத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று குறிப்பாக ஒயர்மேன், போர் மேன், ஏஇ, டிஇ என அனைத்தும் நிலைகளிலும் உள்ள பணியாளர்கள் வாக்களித்து விட்டு பணிக்கு வர வேண்டும்.