காட்பாடி காந்திநகரில் தபால் அலுவலக பூட்டை உடைத்து திருட முயற்சி அலாரம் அடித்ததால் தப்பியை திருடர்கள்

வேலூர், ஏப்.5:காட்பாடி காந்திநகரில் உள்ள தபால் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் திருட முயற்சித்துள்ளனர். அலாரம் ஒலித்ததால் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.காட்பாடி காந்தி நகர் பகுதியில் துணை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 2 ஊழியர் பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணி முடிந்து அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.நேற்று காலை வந்து பார்த்தபோது வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. இரும்பு லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். அந்த நேரத்தில் அலாரம் அடித்துள்ளது. இதனால் நள்ளிரவு அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல் திருட்டு முயற்சியை கைவிட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.இதுகுறித்து புகாரின் பேரில் விருதம்பட்டு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: