கரூர், ஏப்.4: குளத்துப்பாளையம் குகைவழிப்பாதை பணிகள் நீண்டநாட்களாக முடியாததால் இழுப்பதால் பொதுமக்கள்அவதிப்படுகின்றனர். கரூர் -ஈரோடு ரயில்வே இருப்புப்பாதையில் உள்ளது பெரியகுளத்துப்பாளையம்., இந்த பகுதியில் இருந்து கரூர் நகருக்குள் வர குகைவழிப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான பணிகள் தொடங்கியது. ரூ.6.70கோடி திட்ட மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று ரயில்வே பாதையின் கீழ்புறம் உள்ள பகுதியில் பணிகள்நிறைவு பெற்றிருக்கின்றன. ரயில்வே துறையின் பணிகள் முடிவடைந்து ஓராண்டுக்கு மேலாகிறது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சிகள் துறை சார்பில் அணுகுசாலை அமைக்கப்படவேண்டும். இப்பணிகள் இன்னும் பணிகள் துவங்கப்படாத நிலை தொடர்கிறது. எனினும் அணுகுசாலை அமைக்கும்வேலை இன்னும் துவங்காததால் பணிகள் ஜவ்வாகஇழுத்துக்கொண்டிருக்கிறது,.