சாமி கும்பிடுவதில் தகராறு ஆர்டிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

உசிலம்பட்டி, ஏப்.3: உசிலம்பட்டி அருகேயுள்ள கருக்கட்டான் பட்டி கிராமத்தில் ஏப்.4 மற்றும் 5ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக இந்த கிராமத்திலுள்ளவர்கள் சேர்ந்து 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்தும் கோவில் திருவிழா வேலைகள் செய்து வருகின்றனர். விழா நாளை துவங்கும் நிலையில், ஒரு சிலர் திருவிழா நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நியாயம் வழங்குங்கள் என்று கருக்கட்டான்பட்டி கிராம மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர். அப்போது ஆர்.டி.ஓ. முருகேசன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரவு நேரம் என்பதால் அனைவரும் கலைந்து செல்லுங்கள். காலை 10 மணிக்கு வாருங்கள் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறினார். அதன்படி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: