மக்களை கவர்ந்த சிவிஜில் செயலி

புதுச்சேரி,  மார்ச் 29:  புதுவையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க  அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிவிஜில் செயலிக்கு பொதுமக்களிடம் மிகுந்த  வரவேற்பு கிடைத்துள்ளது. புதுவை  மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான  வாக்குபதிவு ஏப்ரல் 18ம்தேதி நடைபெறுகிறது. மே 23ம்தேதி வாக்கு எண்ணிக்கை  நடக்கிறது. இதற்கிடையே தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார்  தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிவிஜில் செயலி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆங்காங்கே  நடக்கும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதில் ெபாதுமக்கள் அவ்வப்போது  புகார்களை பதிவு செய்து வருகின்றனர். இவற்றின் மீது விசாரித்து தேர்தல்  துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

Related Stories: