ஜெயங்கொண்டம், மார்ச் 26: தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய ஜெயங்கொண்டம் பகுதி பொதுமக்களுடன் ஆர்டிஓ நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஜெ.மேலூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, உடையார்பாளையம் உட்பட 13 கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தி திட்டத்துக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலங்கள், தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான உரிய இழப்பீட்டுத்தொகை இதுவரை வழங்கவில்லை. இதனால் தற்போது தங்களது நிலங்களை திருப்பி கேட்டு கடந்த ஒருவார காலமாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.