பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த காவலாளி

புதுச்சேரி,  மார்ச் 22: புதுவை, நைனார்மண்டபம், நாகம்மாள் நகர், முத்தமிழ் வீதியில்  வசித்தவர் பாவாடை (63). தனியார் செக்யூரிட்டியான இவர் தனது மனைவி  அம்பிகாவுடன் வீட்டின் கீழ்தளத்தில் வசித்தார். மேல்தளத்தில் அவரது மகன்  கதிர்வேல் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.

கடந்த 17ம்தேதி அம்பிகா  மரக்காணத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில்,  கதிர்வேலும் திருமண நாளை கொண்டாட தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.  பின்னர் நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பியபோது துர்நாற்றம்  வீசியுள்ளது. சந்தேகமடைந்த அவர்கள் கதவை திறந்து பார்த்தபோது, அங்குள்ள  படுக்கை அறையில் பாவாடை தூக்கில் பிணமாக உடல் அழுகிய நிலையில் கிடந்தார்.  அதிர்ச்சியடைந்த அவர்கள் முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது  தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முதல்கட்ட விசாரணையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் தற்கொலை  முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: