பிஆர்டிசி நடத்துனர் சுருண்டு விழுந்து சாவு

பாகூர், மார்ச் 22: பிள்ளையார்குப்பம் கோயில் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட பிஆர்டிசி நடத்துனர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கிருமாம்பாக்கம் அருகே வள்ளூவர்மேடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பதேவன் (53), பிஆர்டிசி கண்டக்டர். தற்போது முதலியார்பேட்டையில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிள்ளையார்குப்பத்தில் நடந்த முருகன் கோயில் திருவிழாவுக்கு அய்யப்பதேவன் தனது குடும்பத்துடன் சென்றார். அப்போது சுட்டெரிக்கும் வெயிலால் அவர் சுருண்டு விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை ெசய்த டாக்டர், அய்யப்பதேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: