சாமி ஊர்வலத்தில் ரகளை ரவுடிக்கு போலீஸ் வலை

பாகூர், மார்ச் 22: கிருமாம்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தில் உள்ள முருகன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த ரவுடியான லட்சுமிகாந்தன் என்கிற மணிகண்டன் சாமி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, என்னிடம் அனுமதி கேட்காமல், எப்படி திருவிழா நடத்தலாம் என கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் ஊர் தலைவர் சக்ரவர்த்தி (65) என்பவரையும் தரக்குறைவாக திட்டி, சாமி கையில் இருந்த சூலத்தை எடுத்து சக்ரவர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சக்ரவர்த்தி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Related Stories: