மண்ணச்சநல்லூர், மார்ச் 21: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் கல்வி சீர் வரிசை பொருட்கள் வழங்கினர். கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பள்ளிக்கு தேவையான எழுதுபொருட்கள், நாற்காலி, பீரோ, பாத்திரங்கள், தேச தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளியில் வழங்கினர். தலைமை ஆசிரியை ரோசரி விக்டோரியா மற்றும் உதவி ஆசிரியைகள் பொதுமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.