மினிலாரி மோதி விவசாயி பலி

அரியலூர், மார்ச் 21: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் பைக் மீது மினிலாரி மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

புதுகோட்டை ரகுநாதபுரம் தெருவை சேர்ந்தவர் முருகையன் (35). விவசாய தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று விட்டு பைக்கில் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகையனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி முருகையன் இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: