புதுச்சேரி, மார்ச் 21: புதுவை, சண்முகாபுரம், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (55). கட்டுமான தொழிலாளியான இவருக்கு சாந்திமதி (51) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மருத்துவ செலவு உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்த நகைகளை ரங்கநாதன் தம்பதி கடந்த வாரம் தேசிய வங்கி ஒன்றில் அடகு வைத்து ரூ.6 லட்சத்து 450ஐ வீட்டிற்கு எடுத்து வந்தனர். அப்போது சாந்திமதிக்கு கழுத்து மற்றும் தோளில் திடீரென அரிப்பு ஏற்பட்டது. வலி அதிகமானதால் பணப்பையை கட்டிலில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். அதுசமயம் அங்குவந்த மர்ம நபர்கள் பணப்பையை திருடிக் கொண்டு தலைமறைவாகி
விட்டனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் சாந்திமதி முறையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர்.