புதுச்சேரி, மார்ச் 21: புதுச்சேரி போக்குவரத்து பிரிவு (வடக்கு மற்றும் கிழக்கு) எஸ்பி முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் இன்று (21ம் தேதி) நடைபெற இருக்கும் செடல் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செடல் திருவிழாவும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தேர் திருவிழாவும் நடைபெற இருப்பதால், புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் இசிஆர் பிள்ளைச்சாவடி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோயில் வீதியில் மேற்கு பக்கமாக திரும்பி, பின்னர் வடக்கு பக்கமாக மாத்தூர் சாலையில் சென்று பிம்ஸ் மருத்துவமனை ரோட்டில் கிழக்கு பக்கம் திரும்பி வந்து கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து சென்னை செல்ல வேண்டும்.