திமுகவில் 7 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமனம்

புதுச்சேரி, மார்ச் 21:   புதுவை, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக சார்பில் 7 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை நியமித்து திமுக தலைமைக் கழகம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி திமுக அமைப்பாளர்கள் எஸ்பி சிவக்குமார் (வடக்கு), சிவா எம்எல்ஏ (தெற்கு) மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.பி. திருநாவுக்கரசு, தலைமைக்கழக நிர்வாகி ஜூபிடர் சுப்பிரமணியன், தெற்கு மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்ததும் தேர்தல் பணிக்குழு தலைமையில் திமுகவினர் தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் வீதிவீதியாக இறங்கி உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் ஆதரவு திரட்டுகின்றனர்.

Related Stories: