புதுச்சேரி, மார்ச் 21: புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன்களில் பணியாற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாததை கண்டித்தும், அவர்களுக்கான பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை உடனே வழங்க வலியுறுத்தியும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 3வது கட்டமாக உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் நரசிங்கம் முன்னிலை வகித்தார். மத்திய கூட்டமைப்பு லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். வாக்குபதிவுக்கு முன்பு தங்களது கோரிக்கை நிறைவேறாவிடில் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக
எச்சரித்துள்ளனர்.