கடையின் மேற்கூரை வழியாக புகுந்து 10 செல்போன்கள் திருட்டு

புதுச்சேரி,  மார்ச் 21:  புதுவை, முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ். அண்ணா  சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல்  கடையை அவர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று காலை கடையை  திறந்து அவர் உள்ளே சென்றபோது கடைக்குள் வைக்கப்பட்டிருந்த 10 செல்போன்கள்  மட்டும் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம  ஆசாமிகள், கடையின் மேற்கூரை வழியாக உள்ளே புகுந்து செல்போன்களை திருடிச்  சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுத்தார்.  சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து  விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள்  சேகரிக்கப்பட்டது. செல்போனை திருடிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி  வருகின்றனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

Related Stories: