தனியார் கல்லூரி பஸ் மோதி வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை,  மார்ச் 20: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை அருகே  துப்புரவு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் முருகன் மகன் விக்கி  (எ) விக்ரமன் (18). இவரது நண்பர் கீழ்கோட்டை பகுதியை சேர்ந்த குணசேகரன்  மகன் அரவிந்தன் (19). கட்டிட வேலை செய்யும் இருவரும், நேற்று காலை  டூவீலரில் வேலைக்கு சென்றனர். தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் பகுதியில்  சென்ற போது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ், டூவீலர் மீது மோதியது. இதில்,  தூக்கி வீசப்பட்ட விக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  படுகாயமடைந்த  அரவிந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது.

Related Stories: