ஊட்டி, மார்ச் 19: நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க கூடாது என்ற உத்தரவு உள்ள போதிலும், ஊட்டி டவுன் பஸ் ஸ்டேண்ட் பகுதியில் வேகதடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு வர்ணம் பூசாததால் விபத்து ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வேகத் தடைகள் அமைக்க கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதற்கு மாறாக பேரிகார்டு அல்லது சிக்னல் அமைத்து கொள்ளலாம். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த உத்தரவு காற்றில் பறக்கிறது. பெரும்பாலான இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் வேக தடைகளை அமைத்துள்ளனர். இந்த வேக தடைகளுக்கு வர்ணம் பூசப்படாத நிலையில், சாலைகளில் விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டியில் சேரிங்கிராஸ் முதல் மத்திய பஸ் நிலையம் வரை சாலை சீரமைக்கப்பட்டது.