பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

நாமக்கல், மார்ச் 19: பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், கோவை மாவட்ட எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 900 வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: