கும்பகோணம், மார்ச் 19: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக 100 வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வர் என்று தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கூறினார். கும்பகோணத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட 100 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வர். முதல்கட்டமாக கடந்த 11ம் தேதி 50 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கும்பகோணத்தில் இன்று (நேற்று) 10 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவோம். வரும் 20ம் தேதி மயிலாடுதுறையில் முதல்கட்டமாக 10 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதைதொடர்ந்து மீதமுள்ள 90 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக 100 ேபர் போட்டியிடுவர் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு
- தமிழ்நாடு காணி நீர் பாதுகாப்பு இயக்கம் சுதந்திரம் அறிவிக்கிறது 100
- மாநில அரசுகள்
- மத்திய
- தொகுதியில்
- மயிலாடுதுறை மக்களவை