இரண்டு பேர் கைது இளம்பெண் தற்கொலை

அருப்புக்கோட்டை, மார்ச் 19: அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் காயத்ரி (20). இவர், அதே ஊரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வேலை பார்த்த ஸ்டுடியோவில் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மகள் தற்கொலை குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: