சேத்துப்பட்டு, மார்ச் 19: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில், நேற்று நடந்த தேரோட்டத்தின் போது தேர் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், பங்குனி உத்திர பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். இந்நிலையில், தேர் திருவிழாவையொட்டி நேற்று மதியம் 3 மணியளவில் பெரியநாயகி அம்மன், கனக கிரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருத்தேரில் அமர்த்தப்பட்டனர். பின்னர், அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி சுந்தரம், செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் ரவி கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.