அரசு பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி, மார்ச் 19:  புதுச்சேரி முல்லா வீதியில் உள்ள சி.எம்.அஷ்ரப் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார். ஆசிரியை சகாய தீபக்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார். வட்டம் 2ன் பள்ளி துணை ஆய்வாளர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எலக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் கலந்து கொண்டார். இவ்விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பயிற்றுநர் அசிம் பிரேம்ஜி, விவேக், சாகுல் அப்துல் ஹமீது மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொறுப்பு ஆசிரியர் மோகனாம்பாள் தலைமையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: