வியாசா மகளிர் கல்லூரி ஆண்டு விழா

சிவகிரி, மார்ச் 14:  வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் 2ம் ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி சேர்மன் வெள்ளத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் வெள்ளத்தாய் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் நிர்மலாகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணவள்ளி கலந்து கொண்டு பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். சக்தி என்ற தலைப்பில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடந்தது.  விழாவில் உதவி சேர்மன் பிரகாசவள்ளி சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி சட்ட ஆலோசகர் பாலமுருகன், மருத்துவர் ராஜராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கல்லூரி துணை தலைவர் ஹேமா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

Related Stories: