தந்தையைக் கொன்ற மகன் கைது

சிவகாசி, மார்ச் 12: சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25). அச்சக தொழிலாளி. இவரது மகன் சதீஸ்குமார். தந்தை மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் சதீஸ்குமார், தந்தை மாரிமுத்துவின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிந்த சிவகாசி கிழக்கு போலீசார், தலைமறையான சதீஸ்குமாரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: