வாலிபர் பலி

நத்தம், மார்ச். 12: மதுரை மாவட்டம் மேலூர் அருக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்(24). இவர் நத்தம் அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு டூவீலரில் வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். சடையம்பட்டி அருகே அவர் வந்த போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories: