காங்கயம், மார்ச் 8: காங்கயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 9.5 பவுன் நகையை மீட்டனர்.
காங்கயம் திருப்பூர் ரோட்டில் உள்ள ஜெ.ஜெ., நகரில் ரமேஷ்(40) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குண்டடம் நால்ரோட்டில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11.10.2018 அன்று வேலைக்கு சென்று விட்டார். ரமேஷின் மனைவி அன்புக்கரசி இரு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். பகல் 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, காய்கறி வாங்குவதற்கு கடைக்கு காங்கயம் சென்று விட்டு, பின்னர் மாலை 4.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள் அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூரோவில் இருந்த 9.5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.