போடி, மார்ச் 7: கேரளாவிற்கு ஏலத்தோட்டத்திற்கு வேலைக்கு சென்று திரும்பிய தொழிலாளர்களின் ஜீப் முந்தல் சாலையில் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்தது. இதில் தொழிலாளர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த நான்கு பேர், போடி புதுகாலனியை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 6 தொழிலாளர்கள் கேரளா மாநிலம் பியல்ராவ் பகுதி ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். டிரைவர் மணிகண்டன் ஜீப்பை ஓட்டிச்சென்றார்.