உடுமலை, மார்ச் 7: உடுமலை ஆனைமலை ரோடு கே.ரெட்டிபாளையத்தில் சாலை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து, ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணி நடக்கிறது. ஆனால் பல வாரங்கள் ஆகியும் சாலை போடப்படவில்லை. சுமார் ஒன்றரை கி.மீ., தூரத்துக்கு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.