மின்கம்பத்தில் பைக் மோதி விசைத்தறி தொழிலாளி பலி

அவிநாசி, மார்ச் 7: அவிநாசியை  அடுத்து தெக்கலூர் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்   மாணிக்கம் (42). தெக்கலூரில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பைக்கில் தெக்கலூரில் இருந்து கோவிந்தாபுரம்  நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டோரம்  இருந்த ஒரு மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில் பலத்த  காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  மாணிக்கம்  ஏற்கனவே இறந்துவிட்டதாக  அறிவித்தனர்.விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Related Stories: