மண்ணச்சநல்லூர், மார்ச் 7: மண்ணச்சநல்லூர்- சமயபுரம் ரோட்டில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர்- சமயபுரம் ரோட்டில் உள்ளது. 94 மேல சீதேவிமங்கலம். இது மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டாகும். இந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் புள்ளம்பா டிவாய்க்கால் பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாலம் 1960ல் காமராசர் காலத்தில் கட்டப்பட்டதாகும். மேலும் 94 சீதேவிமங்கலத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறனர். இந்த ஊருக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நம்பர் 1 டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக காலை 8.45 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பேருந்து வந்து செல்வது வழக்கம். இதை தவிர பள்ளி வேன் மற்றும் விவசாய பணிகளுக்காக டிராக்டர், மினி லோடு ஆட்டோ, கனரக வாகனங்களும் செல்கின்றன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், அரிசி ஆலைக்கு பணிக்கு செல்வோர் என தினமும் ஏராளமானோர் புள்ளம்பாடி பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.