ஊருக்குள் நுழைய 2 ரவுடிக்கு தடை

வில்லியனூர், மார்ச் 7: மங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல ரவுடிகளான உருவையாறுபேட் தேனீ.ஜெயக்குமார் நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (25), கோர்க்காடுபேட் பகுதியை சேர்ந்த யோகநாதன் (21) ஆகிய 2 பேர் மீதும் ஊருக்குள் நுழைவதற்கு தடை விதிக்க மங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், வில்லியனூர் துணை ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததின்பேரில், 2 பேர் மீதும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: