திருச்சி, மார்ச் 6: திருச்சி விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: நிதி ஆயோக் பொறுத்தவரை கடந்த ஆண்டு 3ம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரசவத்தில் குழந்தை இறப்பை முழுவதும் தடுத்துள்ளோம். மறைந்த முன்னாள் முதல்வர் அறிவித்த தாய் சேய் நல பெட்டகம் வழங்குவதில், தற்போது, 3 மற்றும் 5ம் மாதத்தில் ஊட்டச்சத்து நிறைந்த பெட்டகம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் பிறக்க கூடிய குழந்தைகள் சரியான எடையுடன் ஆரோக்கியமாக பிறக்கின்றனர்.