திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 6: தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிவராத்திரி வழிபாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது. முதலில் சித்தேஸ்வரர், சித்தாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை காசாங்குளம் விஸ்வநாதர் கோயில், பூமல்லியார்குளம் கைலாசநாதர் கோயில், பாலத்தளி தில்லை காளியம்மன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.