மதகலவரத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், மார்ச் 6:  திருப்பூரில், மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளத்துப்புதூர் பகுதி பொதுமக்கள் கலெக்டர் பழனிச்சாமியிடம் நேற்று மனு அளித்தனர். இதுகுறித்து குளத்துப்புதூர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது ,‘‘திருப்பூர், குளத்துப்புதூர் பகுதியில் 600க்கும் மேற்பட்ேடார் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் தொழிற்சாலை என்று கட்டிடம் கட்டி மதப்பிரசாரம் செய்வதோடு மதக் கலவரத்தையும் தூண்டும் விதமாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

Related Stories: