அரசு கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்

உடுமலை, மார்ச் 1:  இடமாற்றம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் இந்த கல்லூரியிலேயே பணியமர்த்த கோரி, உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். சமீபத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில், இக்கல்லூரி பேராசிரியர்கள் சிலரும் பங்கேற்றனர். இதனால் இரண்டு பேராசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் இந்த கல்லூரியிலேயே பணியமர்த்த கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்றும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Related Stories: