புதுச்சேரி, மார்ச் 1: புதுவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு தர்ணாவில் ஈடுபட்டனர். புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம், பதவி உயர்வு, ஊதிய நிலுவை, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் பிப்.28ம்தேதி தர்ணாவில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் முன்பு திரண்ட 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.