சேலம், பிப்.28: சேலத்தை அடுத்துள்ள கூட்டாத்துப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் ஜெகன் (எ) ஜெகநாதன்(30), பிரபல ரவுடி. இவர், தனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கண்ணன் (எ) மாயக்கண்ணனுடன் (31), வழிப்பறி வழக்கில் காரிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரவுடிகள் ஜெகன், மாயக்கண்ணன் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி ஜெகன் மீது 14 வழக்கும், மாயக்கண்ணன் மீது 8 வழக்கும் உள்ளன.