நாமக்கல், பிப்.28: நாமக்கல்லை அடுத்துள்ள வளையப்பட்டியில், வாரச்சந்தை அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயிலின் உள் பகுதியில் ஒரு பெரிய உண்டியலும், இரண்டு சிறிய உண்டியலும் வைக்கப்பட்டது. இதில், 2015ம் ஆண்டு முதல் இதுவரை உண்டியல் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயிலின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், 3 உண்டியல்களையும் உடைத்து பணத்தை திருடிச் சென்று விட்டனர்.