பள்ளி ஆண்டு விழா

நத்தம், பிப். 28: நத்தம் ராம்சன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பேராசிரியர் அய்க்கண் தலைமை வகிக்க, ஆட்சிக்குழு தலைவர் தனபாலன், உறுப்பினர் பாஸ்கரன், தாளாளர் ராமசாமி, முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் தையல்நாயகி வரவேற்றார்.முதல்வர் எழில் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் ஈரோடு மகேஷ், மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பேசுகையில், ‘மாணவர்கள், ஆசிரியர்களை மதிக்கும் தன்மைகளால் சமுதாயத்தில் மிக சிறந்த மனிதர்களாக உயர வழி வகுக்கும்.

மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்’ என்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் பேராசிரியர்கள் ராமநாதன், பாலசுப்பிரமணியன், வர்த்தகர் சங்க சட்ட ஆலோசகர் சேக்சிக்கந்தர்பாட்ஷா, கால்நடைதுறை ஓய்வு உதவி இயக்குநர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Related Stories: