செம்பட்டி, பிப். 28: நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் சுசீலா மேரி (59). இவர் தனது மகள் செல்வராணியுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் வீட்டருகே உள்ள பிச்சை மகன் லாரி டிரைவர் மகேந்திரன் (28) என்பவருக்கும் இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மகேந்திரன் வீட்டிற்குள் புகுந்து சுசீலா மேரி, செல்வராணியை தாக்கி தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.