மஞ்சூர், பிப்.27: மஞ்சூர்-கோவை சாலை சீரமைப்பு பணி துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு சாலை வசதி உள்ளது. நீண்ட காலமாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வரும் இச்சாலையை சீரமைத்து ஊட்டி-கோவை இடையே மூன்றாவது பாதையாக மாற்றப்படும் என கடந்த ஆறாண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், இதுவரை இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கியிருந்தது. ஏற்கனவே இந்த சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மேலும் சீர்குலைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக ஓணிக்கண்டி முதல் வெள்ளியங்காடு வரை சாலையின் இருபுறங்களிலும் முட்ெசடிகள் புதர்போல் வளர்ந்து சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனால், சாலை குறுகலாக காணப்பட்டதுடன் ஒரு வாகனம் மட்டுமே சென்று வர முடிந்தது.மேலும் சாலையில் பெரும்பாலான இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகனங்களில் டயர் பஞ்சர் மற்றும் இயந்திர கோளறுகள் ஏற்பட்டு நடுவழியில் நின்று விடுவது வாடிக்கையாக இருந்தது.