தேனி, பிப். 27: விருதுநகரில் வருகிற மார்ச் மாதம் 6ம் தேதி நடக்க உள்ள தென் மண்டல திமுக மாநாட்டிற்கு தேனி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் திமுகவினர் செல்வது என தேனியில் நடந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம்.செல்வேந்திரன், விவசாய தொழிலாளர் அணி மாநிலத் தலைவர் மூக்கையா, முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் முன்னிலை வகித்தனர். தேனி நகர பொறுப்பாளர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், விருதுநகரில் மார்ச் 6ம் தேதி நடக்க உள்ள தென்மண்டல திமுக மாநாட்டிற்கு தேனி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் தொண்டர்களை திரட்டி கலந்து கொள்வது எனவும், விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும் விருப்ப மனுக்களை சென்னை அறிவாலத்தில் அளிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.