திருத்துறைப்பூண்டி அருகே ெகாத்தடிமையாக இருந்த 2 சிறுவர்கள் மீட்பு

திருத்துறைப்பூண்டி, பிப்.26:    ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் மூலங்குடி பகுதியை சேர்ந்த லிங்கம் என்பவர் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடி வல்லம் பகுதியில் செம்மறி ஆடு மந்தை வய

ல்களில் போட்டுள்ளார்.    ஆடு மேய்த்து பாதுகாப்பதற்காக மன்னார்குடி மன்னை நகரை சேர்ந்த மணிகண்டன் (13), கடலூர் மாவட்டம் தொழுதரை சேர்ந்த ஐயப்பன் ( 10) ஆகிய சிறுவர்களை  அவர்களது பெற்றோர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டு ஆடு மேய்க்க அழைத்து வந்துள்ளார்.சிலதினங்களுக்கு முன்பு இதையறிந்த சைல்டு லைன் அமைப்பினர் இரண்டு சிறுவர்களையும் மீட்டு மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆஜர்படுத்தி பின்னர் குழந்தைகள்காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆலத்தம்பாடி விஏஓ சின்னச்சாமி சிறார்களை ஆடு மேய்ப்பதற்கு பயன்படுத்திய லிங்கம் மீது ஆலிவலம் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  லிங்கத்தை தேடி வருகின்றனர்.    

Related Stories: