சிவகாசி, பிப். 26: திருத்தங்கல்லில் பேன் மருந்து குடித்து 3 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் மேலரத வீதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் மகாலட்சுமி (14). அய்யநாடார் சந்தை சேர்ந்த சித்தநாதன் மகள் முருகேஸ்வரி (14). இருவரும் திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி பள்ளி முடிந்த பின்னர், டிபன் பாக்ஸை எடுக்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட ஆசிரியர், இருவரையும் பெற்றோரை அழைத்து வரச் சொல்லியுள்ளார். இதேபோல, எம்ஜிஆர் காலனி மலைச்சாமி மகள் மனோசாந்தி (15), திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை பெற்றோர் திட்டியதாக தெரிகிறது.