சிவகங்கை, பிப். 26: காரைக்குடி அருகே நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்த நிர்வாகக்குழுவை கலைத்துவிட்டு தனி அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2017-2018 பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஆயிரத்து 486 நபர்களில் முதற்கட்டமாக 537 நபர்களுக்கு வந்த இழப்பீடு தொகையில் முறைகேடு நடந்ததையொட்டி சங்க செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.