ஸ்பிக்நகர், பிப். 26: தூத்துக்குடி அடுத்த ஸ்பிக்நகர் அருகே அத்திமரப்பட்டியில் விளைநிலங்களில் சரிந்தும் நிலையில் இருந்த 10க்கும் மேற்பட்ட ஆபத்தான மின்கம்பங்கள் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டன. தூத்துக்குடி அடுத்த ஸ்பிக்நகரில் இருந்து அத்திமரப்பட்டி, சிறுபாடு வழியாக புதுக்கோட்டை செல்லும் வழியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்கள் இருக்கும் பகுதியில் நடப்பட்டிருந்த மின்கம்பங்கள், கடந்த இரு ஆண்டுகளுக்கு பெய்த கனமழையில் முற்றிலும் சேதமடைந்தன. களிமண் அதிகம் உள்ள இடத்தில் நடப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரியும் நிலையில் இருந்தது.