இளம்பெண் தற்கொலை

புளியங்குடி, பிப். 22: புளியங்குடி  சிந்தாமணியை சேர்ந்தவர்  கணேஷ்ராஜா. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாலாமணி  (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் ஒருவருக்கு  புற்றுநோய் சிகிச்சைக்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார்.  கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு பாலாமணியை தொந்தரவு செய்தனர்.  இதனால்  மனமுடைந்த பாலாமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு  தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புளியங்குடி எஸ்ஐ சண்முகவேல்,  பாலாமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து விசாரித்து வருகிறது.

Related Stories: