சிவகங்கை, பிப். 22: சிவகங்கை நகர்ப்பகுதியில் மின் கணக்கீடு செய்யாததால் வீடு, கடை உரிமையாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியம் மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படும். மின் கணக்கீடு செய்வதில் கணக்கீடு செய்பவர் வீடுகள் உள்ளிட்ட மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து இடங்களுக்கும் சென்று எத்தனை யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என வீட்டில் உள்ள கணக்கீட்டு அட்டையில் பதிவு செய்வர். இந்நிலையில் இந்த மாதம் 15ம் தேதியில் இருந்து சிவகங்கை நகர் பகுதியில் மின் கணக்கீடு செய்ய வேண்டும். ஆனால் நகரில் பெருமாள் கோயில் தெரு, 48 காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. ஒரு வாரத்திற்கும் மேலாக காத்திருந்த வீடுகள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது கணக்கீடு செய்ய ஆள் இல்லை. நீங்களே தற்போது எத்தனை யூனிட் ஓடியுள்ளது என குறித்து வந்து விடுங்கள்.